Tuesday, November 13, 2012

Sundal

கொண்டைக்கடலை சுண்டல்  


அவசியமான பொருட்கள் :

கொண்டைக்கடலை - ஒரு கப்
வெங்காயம் - 1
கொத்த மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:

கடுகு - தாளிப்பதற்கு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - மூன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
முந்திரி - சிறிது
எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - ஒரு கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2

செய்முறை:  



கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும்.அரைக்க வேண்டிய வற்றை அரைத்துக் கொள்ளவும்.


 குக்கரில் கொண்டைக்கடலையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக வைக்கவும்.



கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து பொன் நிறம்மாக வதக்கவும்.


பின் அரைத்த வற்றை சேர்த்துக் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


அதன் பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும். கொத்த மல்லி இலை தூவி பரிமாறவும்.


குறிப்பு:

சுவையான சத்தான ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Thursday, November 8, 2012

Egg Curry

 

முட்டை தொக்கு


அவசியமான பொருட்கள் : 

முட்டை - 3
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

 

செய்முறை:


வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

முட்டை வேக வைத்து  வைக்கவும்.  அதனை தோல் உரித்து  பாதியாக வெட்டி கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு  வெங்காயம்,  பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.


பின்னர் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வேகவிடவும். தண்ணீர் ஊற்றாமல் குறைந்த தீயில் வதக்கவும்.
நன்கு வதக்கி எண்ணெய் மிதந்து வந்தவுடன் முட்டையை அதில் சேர்த்து கிளறவும்.(முட்டை மஞ்சள்கரு வெளியில் வராதவாறு கிளற வேண்டும்)


பின் மல்லி தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டா, நாண்னுக்கு நல்ல காம்பினேஷன். சாதத்துடன் பிசைந்தே அல்லது சாம்பார், ரசம், தயிர் உடனோ சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:


முட்டையை அதில் சேர்க்கும் முன் விருப்ப பட்டால் வெங்காயம், தக்காளி கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து சேர்கவும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.



Sunday, November 4, 2012

அடை


அடை 


 

அவசியமான பொருட்கள் :

 
அரிசி - 1 கப்
உளுந்துபருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு‍ - 1/2 கப்
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்)
சீர‌க‌ம் -‍ 1 தேக்க‌ர‌ண்டி
சோம்பு - 1 தேக்க‌ர‌ண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

 
தேவையான அனைத்து பொருள்களையும் எடுத்து வைக்கவும்.
 
அரிசி, ருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து‌, ன்கு ழுவி எடுத்து, மிளகாய் வத்தல் ,சீரம் ,சோம்பு சேர்த்து மூழ்கும் அ‌ளவு ண்ணீர் சேர்த்து குறைந்தது 3லிருந்து 4 ணி நேரம் ஊறவிடவும்.
 
 
 
ஊறவைத்த அரிசி, ப‌ருப்புபை உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு த‌ண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள‌வும்.அவற்றுடன் சீர‌க‌ம் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் சேர்க்கவும்.
 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாகியதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தேய்த்து மேலே எண்ணெய் ஊற்றவும்.

 
நன்கு வெந்ததும், அடையை திருப்பிபோட்டு, அடுத்த பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.சூடாகரிமாறலாம்
 
 
இதற்கு தேங்காய் சட்னி ,சாம்பார், மற்றும் க்காளி தொக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
 
 
குழந்தைகளுக்கு வெங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைமற்றும் தேங்காய் சேர்க்காமல் அப்படியேவும் ஊற்றிகொடுக்கலாம்.தக்காளி சாஸ்யுடன் குடுக்க விரும்பி உண்பார்கள்.
 

குறிப்பு: 

குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஆரேக்கியமான உணவு இது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.



சோயா தொக்கு

சோயா தொக்கு

 

 அவசியமான பொருட்கள் :

 
சோயா - ஒரு கப்
வெங்காயம்  - ஒன்று
தக்காளி - 2 அல்லது 3 
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது -  1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 

செய்முறை:

 
 
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 
 
சோயா உருண்டை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கழித்து, உருண்டைகளிலுள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். பின்பு அதை நீள துண்டுகளாக நறிக்கி கொள்ளவும்.
 
 
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு, சோம்பு தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
 
அடுத்து தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
 
 
தக்காளி வதங்கியவுடன் உப்பு மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

 
அடுத்து சோயாவை சேர்த்து சிறிது நேரம் கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். பின் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


 
 
இதை சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்,காளான் பிரியாணி ,புலாவ்வுடன்னும்,சாம்பார், ரசம், தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம்.


குறிப்பு:

இது சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


Friday, November 2, 2012

ப்ராக்கலி பொரியல்

ப்ராக்கலி பொரியல்


அவசியமான பொருட்கள் :

ப்ராக்கலி பூக்கள் - 2 கப்
வெங்காய‌ம் - 1
தேங்காய்பூ துருவ‌ல் - 2 மேசைக்க‌ர‌ண்டி
உப்பு - ‍சுவைக்கேற்ப‌
தாளிக்க: 
கடுகு - அரை தேக்கரண்டி
கடலை,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த‌‌ மிள‌காய் - 4
பெருங்காயத்தூள் - சிறிது
க‌றிவேப்பிலை - சிறிது
எண்ணெய்‍ - தாளிக்க
செய்முறை:


ப்ராக்கலியை நறுக்கி தண்ணீரில் அலசி நன்கு தண்ணீரை வடித்து விடவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடான‌தும், க‌டுகு,கடலை,உளுத்தம்பருப்பு, காய்ந்த‌‌ மிள‌காய், க‌றிவேப்பிலை, பெருங்காய‌த்தூள் சேர்த்து தாளிக்க‌வும். பிற‌கு‌ ந‌றுக்கி வைத்த‌ வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
வெங்காய‌ம் வ‌த‌ங்கிய‌தும், ப்ராக்க‌லி பூக்க‌ளை சேர்த்து வதக்கவும். மூடிபோட்டு வேக விடவும்


க‌டைசியாக‌ தேங்காய்ப்பூ துருவ‌லை சேர்த்து, கிள‌றிவிட்டு இற‌க்க‌வும்.
எளிதில் செய்யக்கூடிய ப்ராக்கலி பொரியல் ரெடி.

குறிப்பு:

இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.








Mushroom Biryani

காளான் பிரியாணி


தேவையான   பொருட்கள் :

 காளான் - 2 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
   சோம்பூ - 1 ஸ்பூன்
பட்டை - இரண்டு
லவங்கம் - நான்கு
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்ஜி பூண்டு விழுது -  2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞசள் தூள் - 1/4  தேக்கரண்டி
கொத்தமல்லி ,புதினா - ஒரு கப்
பச்சை மிளகாய் - 1

செய்முறை: 



காளானை கழுவி வெட்டி வைக்கவும்.வெங்காயம் தக்காளியை நீளமாக மெலிசாக வெட்டி வைக்கவும்.அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். கொத்தமல்லி ,புதினா மற்றும் பச்சை மிளகாய்யை அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாயகன்ற சட்டியில் நெய் விட்டு,தண்ணீரை வடித்து விட்டு அரிசியை போட்டு உடையாமல் வறுக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பூ, பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பின் தக்காளியை  வதக்கி அரைத்த வற்றை சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு எல்லா தூள் வகைகளையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் காளான், உப்பு சேர்த்து வதக்கவும்.

1 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும், ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்ல வைத்து 5 நிமிடத்துக்கு பின் அனைத்துவிடவும்.

குறிப்பு:

இதன் உடன் ரயித்தா, சோயா தொக்கு, அப்பளம் சேர்த்து சாப்பிடா அருமையாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.