ஈசி சிக்கன் கறி
அவசியமான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்
எண்ணெய் தவிர சிக்கனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். உடனே செய்தாலும் நன்றாக இருக்கும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்.
ஊற வைத்த சிக்கனை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
மூடி வைத்து நன்கு வேக விடவும். தேவை யென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
மல்லிதழை தூவி பரிமாறவும்.இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் மற்றும் ஆப்பத்துடன்னும் சாப்பிடலாம்.
குறிப்பு:
இது ஈசி ஆனது மட்டும் அல்ல சுவையானதும்,ஆரோக்கியமானதும் கூட.
காலையில் சிக்கனை தயார் செய்து ப்ரிஜில் வைத்து விட்டு மாலையில் சமைக்கலாம் (சமைப்பதர்க்கு 1/2 மணி நேரம் முன்பு எடுத்து வெளியே வைத்துவிடவும்).
காலையில் சிக்கனை தயார் செய்து ப்ரிஜில் வைத்து விட்டு மாலையில் சமைக்கலாம் (சமைப்பதர்க்கு 1/2 மணி நேரம் முன்பு எடுத்து வெளியே வைத்துவிடவும்).
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.