தோசை
அவசியமான பொருட்கள் :
பச்சரிசி - 2 கப்
புழுங்கலரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, ஒன்றாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சரிசி, புழுங்கலரிசி,வெந்தயத்தை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பை தனியாகவும் ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 4 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
முதலில் அரிசியை நன்றாக நற, நறவென்று அரைக்க வேண்டும்.
பின்பு உளுத்தம்பருப்பை போட்டு பொங்க பொங்க நைசாக அரைக்கவும்
(முதலில் உளுத்தம் பருப்பை அரைத்தால் அது உறைந்து விடும்.)
அரைத்து வைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கைவிட்டு கலக்கவும்.கந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.
10 முதல் 12 மணி நேரம் புளிக்கவைக்கவும்.கோடை காலத்தில் 6 முதல் 8மணி நேரத்தில் புளித்துவிடும்
தேவை பட்டால் தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை சூடு செய்து.அடி அகலமான கரண்டியில் மாவை தேய்க்கவும்.
மேலே எண்நெய் அல்லது நெய் ஊற்றி திருப்பி போடவும்.
சூடாக பரிமாரவும்.சட்னி,சாம்பார்,கோழிக் குழம்பு,கறி குழம்பு,பொடி, குருமா இப்படி எதன் உடன்னும் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு:
மாவை அரைத்து ப்ரிஜில் வைத்து 10 நாட்கள் வரை உபயேகிக்கலாம்.மாவு புளித்து விட்டால் சிறிது ரவை கலந்து தோசை ஊற்றலாம் அல்லது வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்து தோசை ஊற்றலாம் .
நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment