Sunday, October 28, 2012

உ ப பாயாசம்

உளுத்தம் பருப்பு பாயாசம்

 

அவசியமான பொருட்கள் :

அரைத்த உளுத்தம் பருப்பு - ஒரு கப்
சக்கரை - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரி பருப்பு - 6
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

 
 

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊரவைக்கவும்.பின்பு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
 
ஒரு கடாயில்  நெய் விட்டு திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 

அரைத்த உளுத்தம் பருப்பை தண்ணிர் விட்டு கரைத்து சிறிய தீயில் கொதிக்க வைக்கவும்.விடாமல் கிளறி கொன்டே இருக்கவும்.
 

நன்கு கொதித்ததும்.சக்கரை சேர்க்கவும்.பின்பு தேங்காய்,முந்திரி,திராட்சை  மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
 

சூடாகவோ அல்லது ஜில்லென்றே பரிமாறவும்.



குறிப்பு:

உளுத்தம் பருப்பில் புரதசத்து இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோர்க்கும் ஏற்றது.கைவிடாமல் சற்று கவணத்துடன் கிளரவும் இல்லை யென்னில் அடிபிடித்து விடும்.
தேங்காய் துருவல்லுக்கு பதில் தேங்காய்யை நறுக்கி போட்டால் வித்தியாசமாக இருக்கும்.
இந்த வித்தியாசமான பாயாசத்தை செய்து பார்த்து மகிழுங்கள்.
உங்கள் கருத்தை மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்.
 






No comments:

Post a Comment