Wednesday, October 17, 2012

தக்காளி சாதம்

தக்காளி சாதம்


அவசியமான பொருட்கள் :


பாஸ்மதி அரிசி - 1 கப்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2  தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி,புதினா - 1 கப்
உப்பு - தேவையான அளவு
 

தாளிக்க:

பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
நெய்  அல்லது எண்ணெய்  - தேவையான அளவு
செய்முறை:
 
 
அரிசியை கழுவி 10  நிமிடம் ஊற வைக்கவும்.
தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.

 
ஒரு வாயகன்ற சட்டியில் நெய் விட்டு,தண்ணீரை வடித்து விட்டு அரிசியை போட்டு உடையாமல்  வறுக்கவும்.

  
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.


பின் வெங்காயம் பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் , இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 

புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.



அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.


பின்னர் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும்,தண்ணீர் 1 கப் சேர்க்கவும்.
 

தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி விடவும் .1 விசில் வந்நதும் அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைக்கவும்.


விசில் அடங்கியதும் சாதத்தை கலந்துவிடவும்.
விருப்ப பட்டால் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
 


 


குறிப்பு:
இத்துடன் தயிர் பச்சடி, உருளை கிழங்கு தக்காளி தொக்கு, வேகவைத்த முட்டை அல்லது அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment