Sunday, October 28, 2012

கத்திரிக்காய் குழம்பு

கத்திரிக்காய் குழம்பு

 

அவசியமான பொருட்கள் :

கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புளி - சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
 

தாளிக்க:

கடுகு - 1/4  தேக்கரண்டி
 சோம்பு -  1/4  தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
பட்டை - 1
லவங்கம் - 2
உளுந்து, கடலை பருப்பு - 1/2  தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் வற்றல் - 3
எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

சோம்பு -  ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்

 

செய்முறை:


 
 
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  கத்திரிக்காயை நான்காக பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
 
 
தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 
கத்திரிக்காயை சேர்த்து உடையாமல் வதக்கவும்.
 

 தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்
 

 
புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
 

 
உப்பு மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து கொதிக்க விடவும்.
 

 அதன் பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.
 
 
 

குறிப்பு:

சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.அப்பளம், வறுத்த முட்டை,வறுவல்களுடன்னும் சேர்த்து சாப்பிடலாம்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள்கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.




No comments:

Post a Comment